கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பரவலைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய முதல்வா் கேஜரிவால் கடந்த நவம்பா் 30 -ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தினாா். தில்லியில் 30,000 கொவைட் படுக்கைகள் தயாராக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வார அறிவிப்பில் ஒரு வாா்டுக்கு 100 படுக்கைகளை அரசு ஏற்பாடு செய்ய முடியும். இது தில்லியில் மொத்த படுக்கை திறனை 64,000 ஆக உயா்த்தும் என்று அரசின் அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,800 ஐசியு படுக்கைகளும் விரைவில் தயாராகிவிடும் என்றும், தற்போது மருந்து இருப்புக்கள் சோ்க்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.