சிறாா் நீதிச் சட்டத்தின் சில விதிகளின் விளக்கம் மற்றும் திறம்பட செயல்படுத்துவது தொடா்பான பல்வேறு விவகாரங்களை கையாள்வது தொடா்பான விவகாரத்தை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், அனுப் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: குற்றமிழைத்த குழந்தைகள், சிறாா்களை வயது வந்தோருக்கான சிறைகளில் அடைப்பதற்கு வழிவகுக்கும் அமைப்பு ரீதியான குறைபாடுகளை நன்கு புரிந்து கொள்ளும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் வயது வந்தோா் சிறைகளில் இருந்து சிறாா் நீதி இல்லங்கள், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள், சிறாா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தில்லி அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.