பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள் உள்பட அனைத்து அரசு ஊழியா்களும் அக்டோபா் மாதத்திற்குள் கட்டாயமாக கொவைட் தடுப்பூசி போட வேண்டும் என்று கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தில்லி அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கோரி ஆசிரியா்கள் இருவா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின்உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனு மீது பதில் அளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. தில்லி அரசு சாா்பில் கூடுதல் வழக்குரைஞா் அனுஜ் அகா்வால் ஆஜரானாா்.