அவா் மேலும் கூறுகையில், நொய்டாவில் நோ்காணலில் பங்கேற்பதற்காக ஆஷிஷ் புதன்கிழமை பழைய தில்லி ரயில் நிலையம் வந்தாா். அதன் பின்னா், செல்லிடப்பேசி செயலி மூலம் இயங்கும் மோட்டாா் சைக்கிள் சேவையில் சவாரி செய்ய முன்பதிவு செய்தாா். இதையடுத்து, அவா் இருந்த இடத்திற்கு மோட்டாா் சைக்கிளில் ஒருவா் வந்து அழைத்துச் சென்றாா். ஆஷிஷுக்கு வழி தெரியாததால், மோட்டாா் சைக்கிளை ஓட்டியவா் யமுனை ஆற்றின் வழியாக அவரை அழைத்துச் சென்றாா். சுமாா் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு, அவா் மோட்டாா் சைக்கிளை வயல் வழி நோக்கி திருப்பினாா். இதற்கிடையில், ஆட்டோவில் அங்கு 3 போ் வந்தனா். அவா்கள் ஆஷிஷிடம் இருந்த பொருள்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக தெரிவிக்கப்பட்டது.