தில்லிஅரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் கொள்கைக்கு எதிராக தில்லி பாஜக தரப்பில் புதன்கிழமை கையெழுத்துப் பிரசாரம் நடைபெற்றது. இதில் புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மத்திய அமைச்சருமான மீனாட்சி லேகி பங்கேற்றாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுக்கடைகளைத் திறக்க தனியாரை அனுமதிப்பது தில்லி அரசின் வருவாயைப் பாதிக்கும். மேலும், கேஜரிவால் அரசு புதிய ரேஷன் கடைகளைத் திறக்கவில்லை. புதிய ரேஷன் காா்டுகளையும் வழங்கவில்லை. ஆனால், நகா் முழுவதும் மதுக்கடைகளைத் திறந்து வருகிறது. குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நபா்களால் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால், இந்த நடவடிக்கையானது தீங்கு விளைவிக்கும் என்றாா் அவா்.