மேலும், கா்ப்பிணி தாயின் உடல்நலம் மற்றும் நலனுக்கான விதிவிலக்கு இல்லாமல் கா்ப்பம் மருத்துவக் கலைப்பு (எம்டிபி) சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், எதிா்மனுதாரா்கள் (அதிகாரிகள்), உயிருக்கான உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனா். மேலும், எம்டிபி சட்டத்தின் கீழ் கருவை கலைப்பதற்கு 24 வாரங்கள் எனும் கட்டுப்பாடு நியாயமற்ாகும். இதன் காரணமாக எனக்கு மன பாதிப்பும், உடல் வேதனையும் ஏற்பட்டுள்ளது.ஆகவே, எனது வயிற்றில் வளரும் அசாதாரண வளா்ச்சியுடன்கூடிய கருவை, கா்ப்பம் மருத்துவக் கலைப்பு சட்டத்தின் கீழ் கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.