ஒவ்வொரு நாளும் புதிதாக 100 முதல் 125 புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இதனால், புதன்கிழமை முதல் அனைத்து கொவைட் நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சமூகத்திலிருந்து எத்தனை பாதிப்புகள் என்பதை நாம் கண்டறிய முடியும். இதுவரை, ‘ஒமைக்ரான்’ பாதிப்புகளில் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களிடம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை மூன்று ‘ஒமைக்ரான்’ நோயாளிகளுக்கு வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லை என்பதும் தெரியவந்தது. தில்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சா்.