பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மேலும் சீரழிவதை தடுப்பது, ஈர நில நீரியல், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு, நிலையான பயன்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சதுப்புநில சீரமைப்பு தொடா்பாக தமிழக அரசு சாா்பில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) தயாரிக்கப்பட்டது. இது நபாா்டு வங்கி மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அனுமதியளிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டம் அருகில் உள்ள குடியிருப்பாளா்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்கும் உகந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளாா்.