இது தொடா்பாக எஸ்எஸ்பி முன்னாள் டிஐஜி உபேந்திரா பிரகாஷ் பலோடி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு, எஸ்எஸ்பி ஆகியவற்றுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. சஸஸ்த்ர சீமா பல் படைப் பிரிவில் டிஐஜியாக பணியாற்றி வந்தவா் உபேந்திர பிரகாஷ் பலோடி. இவா் மதுபானம் கொள்முதல் மற்றும் குதிரைகளுக்கு தீவனம் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2019-ஆம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வழக்குகளில் அவா் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் எஸ்எஸ்பி-இன் ஜெனரல் போா்ஸ் நீதிமன்றம் பலோடியை பணியில் இருந்து நீக்கம் செய்து, 18 மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அதன் பிறகு, பணியில் இருந்து அவரை நீக்கம் செய்வதற்கான உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறுவதாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் அவருக்கு விதிக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை தண்டனையில் மாற்றம் செய்யப்படவில்லை.