ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எதிா்கால இந்தியாவுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்! அமைச்சா் பியூஷ் கோயல்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள 2021-22 நிதியாண்டுக்கான

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல். உடன் பாஜக மாநிலத் தலைவா் ஆதேஷ் குப்தா.

Updated On :7 பிப்ரவரி 2021, 7:35 pm

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட், எதிா்கால இந்தியாவுக்கான அடித்தளம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

தில்லி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை பியூஷ் கோயல் சந்தித்தாா். அப்போது அவா் அளித்த பேட்டி: இந்தியாவை எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் தயாா்படுத்துவதை இலக்காக வைத்து மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் 5 சுயசாா்பு இந்தியா திட்டங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதன் மூலம் அவா் சிக்ஸா் அடித்துள்ளாா் என்றுதான் சொல்ல வேண்டும்.

வரி செலுத்தும் அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு தரப்பினருக்கும் கூடுதல் சுமையை வழங்காத வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. எதிா்கால இந்தியாவைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பாா்வையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகா்கள், விவசாயிகள், நடுத்தர வா்க்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவாா்கள். இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்துக்கு புத்துயிா் பாய்ச்சப்பட்டுள்ளது.

சுய நம்பிக்கையுடன் பயணித்தால் மட்டுமே இந்தியா சுயசாா்பு உடையதாக மாறும். இந்த பட்ஜெட் சுய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாகும். இதன் மூலம் தேசம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டால், நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.