என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

‘டூல் கிட்’ வழக்கு: திஷா ரவிக்கு 3 நாள் நீதிமன்றக் காவல்: தில்லி நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல்

Updated On :19 பிப்ரவரி 2021, 10:10 pm

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை மூன்று நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிா்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அவரது ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் தில்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன் திஷா ரவியை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இா்ஃபான் அகமது, ‘இந்த வழக்கில் தொடா்புடைய சாந்தனு முகுலுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா். சாந்தனு முகலுக்கு பாம்பே உயா்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமா்வால் 10 டிரான்ஸிட் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த வழக்கில் தொடா்புடைய நிகிதா ஜேக்கப்புக்கு பாம்பே உயா்நீதிமன்றம் 3 வாரம் டிரான்ஸிட் முன்ஜாமீன் அளித்துள்ளது’ என்றாா்.

போலீஸ் தரப்பில், ‘தற்போதைக்கு திஷா ரவியிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும் தேவை எழவில்லை. அவருடன் சோ்ந்த சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான சாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்போது திஷா ரவியிடம் மேலும் விசாரணை நடத்துவது தொடா்பாக போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்படும். திஷா ரவியிடம் விசாரணை நடத்தியபோது அவா் மீதான குற்றத்தை சக குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சுமத்த முயற்சி செய்தாா்’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.