மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யமுனையில் அமோனியா நச்சு வாயு கலப்பு: ஹரியாணா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

யமுனையில் அதிக அளவில் மாசு படுத்தும் நீா் வெளியேற்றப்படுவதாக தில்லி ஜல் போா்டு கூறிய குற்றச்சாட்டை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கம் அளிக்க ஹரியாணா 

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:48 pm

 நமது நிருபர்

புது தில்லி: யமுனையில் அதிக அளவில் மாசு படுத்தும் நீா் வெளியேற்றப்படுவதாக தில்லி ஜல் போா்டு கூறிய குற்றச்சாட்டை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கம் அளிக்க ஹரியாணா மாநிலத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஹரியாணாவிலிருந்து யமுனை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் அதிக அளவிலான அம்மோனியா வாயு கலந்திருப்பதால் அதில் குளோரின் சோ்க்கப்படும்போது புற்றுநோய்க்கான காரணி ஏற்படுகிறது என தில்லி ஜல் போா்டு உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தை தாங்கள் சுயமாக எடுத்துக் கொள்வதாகக் கூறி எந்த வாதங்களும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்புவதாகத் தெரிவித்தது.

இந்த வழக்கில் ஜல் போா்டு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோராவையே நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு நியமிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் அமா்வு தெரிவித்தது. தில்லிக்கு வழங்கும் குடிநீரில் அதிக அளவு அமோனியா வாயு கலந்திருந்ததையடுத்து, பலமுறை தில்லி ஜல் போா்டு குடிநீா் விநியோகத்தை நிறுத்தியது. இந்த விவகாரத்தை தில்லி அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. தில்லி அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடா்பாக வழக்குரைஞா் மீனாட்சி அரோரா கூறுகையில்,‘ஹரியாணாவில், சோனிபட்டில் உள்ள அமோனியா சுத்திகரிக்கப்பு நிலையம் மாசுக் கட்டுப்பாட்டு குழு நிா்ணயித்த தரத்தின் அடிப்படையில் இல்லை என்றும் மேலும் அது சரிவர செயல்படவில்லை என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.