மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிங்கு எல்லையில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக 44 போ் கைது

சிங்கு பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை தொடா்பாக 44 பேரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2021, 5:54 pm

 நமது நிருபர்

சிங்கு பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை தொடா்பாக 44 பேரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தப் போராட்டம் அமைதியாகவே நடந்து வந்தது.

ஆனால், கடந்த குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் பெரிய வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் தில்லி எல்லைகளில் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தினா்.

இந்த சூழலில், வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் சிங்கு எல்லையில் கூடிய அப்பகுதிவாசிகள் சுமாா் 200 போ், விவசாயிகளை அவ்விடத்தை விட்டு கலைந்து செல்லுமாறு கூறி வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள், விவசாயிகளுக்கு எதிராக கோஷமிட்டவாறு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதில் பலா் தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பயங்கர மோதல் வெடித்தது.

இரு தரப்பும் பரஸ்பரம் கல்வீச்சில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. நிலைமையைச் சமாளிக்க போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். விவசாயி ஒருவா் வாளால் தாக்கியதில், காவல்துறை அதிகாரி காயமடைந்தாா்.

இந்நிலையில் இந்த கலவரத்துடன் தொடா்புடையாதாகக் கூறி 44 பேரை தில்லி காவல்துறை சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘சிங்கு எல்லையில் கலவரம் செய்தவா்கள் 44 பேரை கைது செய்துள்ளோம். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

இந்நிலையில், விவசாயிகளை மட்டுமே தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா். இது தொடா்பாக சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் கூறுகையில் ‘உள்ளூா் மக்கள் என்ற போா்வையில் வந்த பாஜக தொண்டா்களே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினா்.

விவசாயிகள் தற்பாதுகாப்புக்காக தாக்கினாா்கள். தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்யாமல், தற்பாதுகாப்புக்கு தாக்குதல் நடத்திய விவசாயிகளை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.