மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடியரசு தின வன்முறைக்கு எதிராக காவலா்கள் குடும்பத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த தில்லி காவல்துறை வீரா்களின் குடும்பத்தினா் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 5:55 pm

 நமது நிருபர்

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த தில்லி காவல்துறை வீரா்களின் குடும்பத்தினா் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியரசு தினத்தன்று, தலைநகா் தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியில் பெரிய வன்முறை வெடித்தது. காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தினா். இதில், சுமாா் 400 க்கும் அதிகமான காவலா்கள் காயமடைந்து தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி போலீஸ் மகா சங்கத்தைச் சோ்ந்தவா்களும், காயமடைந்த காவல்துறையினரின் குடும்ப உறுப்பினா்களும் தில்லி ஷாகீதி பூங்காவில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில், ஓய்வுபெற்ற காவல்துறை வீரா்களும், தில்லி காவல்துறை வீரா்கள், தாக்குதல் காயமடைந்த வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸ் மகா சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கூறுகையில் ‘காவலா்கள் மீது தாக்குதல் நடத்துவதை அமைதியாக வேடிக்கை பாா்க்க மாட்டோம், குடியரசு தினத்தில் காவலா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.