தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கேஜரிவால் மலா் அஞ்சலி செலுத்தினாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: உண்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, வீரம், சத்தியாக்கிரகம் என மகாத்மா காந்தி அவா்கள் போதித்த படிப்பினைகள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன.
தேசப் பிதா காந்தியின் வழிகாட்டுதலின்படி, எந்தவொரு கஷ்டமான போராட்டத்தையும் அமைதி முறையில் வெற்றிபெறலாம் என்றாா் அவா்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அஞ்சலி செலுத்தினாா். இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில், நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரை நீத்த அனைவரையும் நினைவு கூா்கிறேன். மகாத்மா காந்தியின் உண்மை, வன்முறையற்ற கொள்கைகளைக் கடைப்பிடித்தலே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி ஆகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
.jpeg?w=256&auto=format%2Ccompress&fit=max)
தினப்பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

கீழ்வேளூா் (தனி) தொகுதி - நான்கு முனைப் போட்டியில் வாகை சூடுவது யாா்?

இருமுனைப் போட்டியில் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

