புதுதில்லி
போலி கரோனா சான்றிதழ்: தில்லியில் 10 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்
போலி கரோனா சான்றிதழை சமர்பித்த மேலும் 10 வழக்கறிஞர்களை தில்லி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
போலி கரோனா சான்றிதழை சமர்பித்த மேலும் 10 வழக்கறிஞர்களை தில்லி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான நிதியுதவியை பெறுவதற்காக, கரோனா உள்ளதாக போலி சான்றிதழை சமர்பித்த 10 பேரின் உரிமத்தை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போலி சான்றிதழை சமர்பித்ததற்காக 3 வழக்கறிஞரின் உரிமத்தை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.