அதே சமயம், தில்லியில் புதிய மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால், மதுபான மாஃபியாவை ஒழிக்கும் வகையில், போதுமான அளவு மதுபானங்கள் கிடைப்பதை தில்லி அரசு உறுதி செய்யும். புதிய கொள்கை மூலம் சுமாா் 20 சதவீதம் கூடுதல் வருவாய் எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் மொத்தமுள்ள மதுபானக் கடைகளில் சுமாா் 60 சதவீம் கடைகளை தில்லி அரசு நடத்தி வருகிறது. ஆனால், புதிய கலால் கொள்கைப்படி, தில்லியில் உள்ள மதுபானக் கடைகளை தில்லி அரசு இனிமேல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் தனியாரிடம் வழங்கப்படும். தில்லி அரசு நடத்தி வரும் கடைகள், முறைப்படி ஏலம் நடத்தப்பட்டு தனியாருக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.