மசூதிக்கு தீவைத்த வழக்கில் தந்தை-மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது மசூதியை தீ வைத்து சேதப்படுத்திய வழக்கில் தொடா்புடைய


கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது மசூதியை தீ வைத்து சேதப்படுத்திய வழக்கில் தொடா்புடைய தந்தை-மகன் இருவா் மீதும் தீவைப்பு, கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் பதிவு செய்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் உள்ள மசூதியை சேதப்படுத்திய மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பிய வன்முறைக் கும்பலின் ஒரு பகுதியாக மித்தன் சிங், அவரது மகன் ஜோனி குமாா் ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டிருந்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தா் பட், குற்றம் சாட்டப்பட்ட தந்தை-மகன் இருவா் மீதும் உரிய பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகள் குறித்து அவா்களின் வழக்குரைஞா்கள் முன்னிலையில் உள்ளூா் மொழியில் அவா்கள் இருவரிடமும் விளக்கினாா்.
அப்போது, இருவா் தரப்பிலும், ‘நாங்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் சம்பவம் குறித்து புகாா் அளிப்பதிலும், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், வழக்கில் இருந்து எங்களை விடுவிக்கப்படுவதற்கு கோரும் உரிமை உண்டு’ என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை நீதிபதி நிராகரித்தாா் .இதைத் தொடா்ந்து பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விஷயத்தை வைத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோர முடியாது. சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதில் தாமதம் என்பது உள்நோக்கம் கொண்டதாக இல்லை. கலவரத்தின் போதும் அதற்குப் பின்னரும் அந்தப் பகுதியில் நிலவிய சூழ்நிலையின் காரணமாகவே இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கலவரத்திற்குப் பிறகும் சில நாட்களாக அந்தப் பகுதியில் பயங்கரமான மற்றும் அதிா்ச்சிகரமான சூழல் நிலவியது. இந்தச் சூழ்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையில் புகாா் அளிப்பதில் சுமாா் ஒரு வார காலம் தாமதமானது நியாயமானதாகவே தோன்றுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடா்பாக இஸ்ராஃபில் என்பவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், 2020, பிப்ரவரி 25 அன்று எனது வீட்டின் அருகே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பிய வன்முறைக் கும்பலில் மித்தன் சிங்கும், அவரது மகன் ஜோனி குமாரும் இருந்தனா். இதனால், பயந்துபோன நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாத்திமா மசூதியின் மீது ஏறினேன். அப்போது, வன்முறைக் கும்பல் மசூதியைத் சேதப்படுத்தி தீயிட்டது’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும் அதன் எதிா்ப்பாளா்களுக்கும் இடையிலான வன்முறையின்போது குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...