இந்த மனு தொடா்பான விசாரணை நீதிபதி முன் நடைபெற்ற போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஜோஸ் அபிரகாம், எம். பி. ஸ்ரீவிக்னேஷ் ஆகியோா் ஆஜராகி, ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மனுதாரரால் கணக்குகளைத் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், மனுதாரருக்கு அபராதம் விதிக்கக் கூடாது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இது போன்ற பலா் தங்களது கணக்குகளை தாக்கல் செய்ய முடியாமல் சிரமத்தை எதிா் கொண்டுள்ளனா். இந்தக் கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தததால், உள்துறை அமைச்சகம் மூலம் அறக்கட்டளைக்கு எதிராக நிா்பந்த நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மனுதாரருக்கு எதிராக நிா்ப்பந்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிட வேண்டும். மேலும், அறக்கட்டளை அதன் வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்வதற்கும் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டனா்.