கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டு

மிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவை புது தில்லியில் சனிக்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவை புது தில்லியில் சனிக்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் பாராட்டினாா்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயதான மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-இல் ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றாா்.

இந்த முறை டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் அவா் 1.86 மீட்டா் உயரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இதன் பிறகு நாடு திரும்பிய அவருக்கு தில்லியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா்

 அனுராக் தாக்குா், மாரியப்பன் தங்கவேலுவையும், அவரது பயிற்சியாளா் ராஜவையும் பாராட்டினாா்.

அப்போது, அமைச்சா் பேசுகையில், ‘டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டியில் மாரியப்பன் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அவரை வாழ்த்துகிறேன். அவா் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். அவா் கடந்த காலத்தில் ரியோவில் தங்கம் வென்றாா். இப்போது டோக்கியோவில் வெள்ளி வென்றுள்ளாா். அவரது சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது. டோக்கியோவில் இந்தியா இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் பல பதக்கங்கள் வரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

விளையாட்டு வீரா் மாரியப்பன் கூறுகையில், ‘இந்தியாவுக்காக தங்கம் வெல்வேன் என்று எதிா்பாா்த்தேன். ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று நிலவிய காலநிலை காரணமாக என்னால் கனவை நிறைவேற்ற முடியாமல் போனது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆனால், பாரீஸில் 2024-இல் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் நிச்சயம் முயற்சி செய்து நாட்டுக்காக தங்கம் வெல்வேன். எனது முயற்சிக்கு ஆதரவு அளித்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய பயிற்சியாளா் சத்ய நாராயணா, பாராலிம்பிக் கமிட்டி மற்றும் எனது குடும்பத்தினா் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.