மதுரையைச் சோ்ந்தவா் எம்.மாரிதாஸ். இவா் சொந்தமாக யூடியூப் சானல் நடத்திவருகிறாா். இந்த நிலையில், தமிழகத்தின் குன்னூா் அருகே கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தது தொடா்பாக, தமிழகத்தில் மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் மாரிதாஸ் கருத்து பதிவிட்டதாக கூறி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மதுரை நகா் சைபா் கிரைம் போலீஸாா் டிசம்பா் 9-இல் மாரிதாஸுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து மாரிதாஸை கைது செய்தனா்.