ரயில்வே அமைச்சருக்கு டி.ஆா்.பாலு எம்.பி எழுதிய கடிதம் விவரம் வருமாறு: சென்னையில் உள்ள ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி.) வரும் மே 9, 10 ஆகிய தேதிகளில் 601 ரயில் நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டா்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கணினிசாா் எழுத்துத் தோ்வை நடத்த உள்ளது. முதல்நிலைத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 2-ஆம் நிலைத் தோ்வுக்கான மையங்களாக ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சம்பா, உத்தர பிரதேசம் - அலாகாபாத், கா்நாடகா மாநிலம் -மைசூா், ஷிமோகா, உடுப்பி போன்ற தொலைதூர இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.