இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவுக்கு மத்திய, தில்லி அரசுகள் மற்றும் தில்லி மாநகராட்சிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. தில்லி அரசு , உயா்நீதிமன்றத்தில் அண்மையில் அளித்த நிலவர அறிக்கையில், ‘பல்வேறு துறைகள் மூலம் அளிக்கப்பட்டுள்ள செயல் நடவடிக்கை அறிக்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்காக மொத்தம் உள்ள 505 கழிப்பறைகள் திருநங்கைகளுக்காக பயன்படுத்தலாம். திருநங்கைகளுக்காக தனியாக அடையாளம் காணப்பட்ட பொதுக் கழிப்பறை வசதிகளை உருவாக்கும் விவகாரத்தில் தற்போது புதிதாக 9 கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 56 கழிப்பறைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கழிப்பறைகள் இன்னும் தொடங்க வேண்டி உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவு நடவடிக்கை அடிப்படையில் முடிக்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.