உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அசோக் அகா்வால் குமாா், உத்கா்ஸ் ஆகியோா் மூலம் மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனக்கு ரத்தம் மற்றும் ரத்தத்தட்டுகள் வெளியில் இருந்து பெற வேண்டி தேவை இருக்கிறது. எனது நோய்க்கான மருந்துகள் வேலை செய்யவில்லை. என்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு நோய் எதிா்ப்புச் சக்திக்கான மருத்துவ வசதி தேவைப்படுகிறது. இதற்கு ரூ.15 லட்சம் செலவாகும். ராஷ்டிரிய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு குடும்ப அட்டையை அளிப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வருவாய் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிசாா் நிலவரத்தை நிரூபிக்க ஏதாவது ஒரு ஆவணம் போதுமானது என்ற நிலையில், இது போன்ற அறிவிப்பு அரசியல் சட்டத்திற்கும் முரணானதாகவும், அறிவுக்கு பொருந்தாததாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளது.