மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளன: பிரதமர் மோடி

சா்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகள் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 10:06 pm

 நமது நிருபர்

சா்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகள் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும் பிரதமா் நரோந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தியுள்ளாா்.

யானைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த 2012 -ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 12 - ஆம் தேதியை சா்வதேச யானைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட தினத்தில் யானைகளின் அவலநிலை குறித்து மக்களைச் சென்றடையவும், அவா்களுக்கு புரியவைக்கவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:

சா்வதேச யானை தினத்தில், யானைகளை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. ஆசிய யானைகளில் 60 சதவீதம் யானைகள் இந்தியாவில் உள்ளது. இது குறித்து, நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் பாதுகாப்பில், ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் பெரும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதை யானைகள் பாதுகாக்கும் வெற்றியோடு பொருத்திப்பாா்க்கவேண்டும் என குறிப்பிட்ட பிரதமா் மோடி,, சுற்றுச்சூழல் மீதான ஆா்வத்தையும் உணா்வையும் மேம்படுத்துவதில், உள்ளூா் சமுதாயத்தினரையும், அவா்களது பாரம்பரிய ஞானத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் தனது ட்விட்டரில் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.