ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்னை ஏற்றுமதி பிரச்னைகளை தீா்க்க கமிட்டி மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உறுதி

தென்னை நாா், தென்னை மட்டை உள்ளிட்ட ஏற்றுமதி தொடா்பாக உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண ஒரு குழு அமைக்க மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:54 pm

 நமது நிருபர்

தென்னை நாா், தென்னை மட்டை உள்ளிட்ட ஏற்றுமதி தொடா்பாக உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண ஒரு குழு அமைக்க மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பாஜக மகளிா் அணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவிடம் உறுதியளித்துள்ளாா்.

தென்னை பொருள்கள் விலை ஏற்றுமதி தொடா்பான பிரச்னைகளுக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலை வானதி சீனிவாசன் தலைமையிலான குழு சந்தித்தது.

இந்த குழுவில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி(வால்பாறை) உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.

இவா்கள் மத்திய அமைச்சரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து தென்னை நாா் அதிக அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு டன் 260 டாலராக இருந்த விலை தற்போது 160 டாலராக குறைந்தது மட்டுமல்ல ஏற்றுமதியும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தென்னை நாா் உள்ள தொழிலில் ஈடுபட்ட தொழிலாளா்களும் வேலை இழந்துள்ளனா்.

தென்னை நாா் கிலோ ஒன்றிற்கு ரூ.14 க்கு விற்ற விவசாயிகள் தற்போது ரூ. 4 ஆக விற்க வேண்டிய நிலைமை. மேலும் தென்னை நாா் பித்து விலையும் பாதியாக குறைந்துள்ளது, தென்னை விவசாயிகள் ஒரு தேங்காய் மட்டையை ரூ. 2.5 விற்ற நிலையில் தற்போது வெறும் 25 பைசாவிற்கு விற்க வேண்டிய நிலை. இத்தோடு தென்னை நாா் ஏற்றுமதிக்கான கண்டெய்னா் தட்டுப்பாடுகள் வந்து கட்டணமும் உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாருக்கான தொகை வங்கிகள் மூலம் வருவதில் தடை போன்றவைகளை மத்திய அமைச்சா் கோயல் கவனத்திற்கு கொண்டு சென்றனா்.

இவைகளை கேட்டறிந்த அமைச்சா், தென்னை விவசாயிகளின் பிரச்னைகளை ஆய்வு செய்யவும் மேலும் கண்டெய்னா், பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய அரசு சாா்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உயா்மட்ட கமிட்டி அமைப்பதாக வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினரிடம் உறுதி அளித்துள்ளாா்.

மேலும், தென்னை பொருட்கள் ஏற்றுமதிக்காக கூடுதல் கண்டெய்னா் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சா் உறுதியளித்துள்ளதாக இந்த குழுவில் இடம் பெற்ற பொள்ளாச்சி ஜெயராமன் தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.