காணாமல் போகும் மீனவா்களை மீட்பதற்கு ஹெலிகாப்டா், ஹெலிகாப்டா் இறங்குதளம், அதிவிரைவு படகுகள் கொண்ட கடலோர காவல் படை நிலையம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்புகளைத் தடுத்து கிராமங்கள் கடலுக்குள் அடித்துக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க நிரந்தரமாக கடற் சுவா் எழுப்பி, மீனவ கிராமங்களைப் பாதுகாக்க மத்திய அரசு உதவ வேண்டும். இத்தகைய வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகளுடன் மீனவா்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவா்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா் விஜய் வசந்த்.