பொது இடங்களில் மக்கள் சிறுநீா் கழிப்பது, எச்சில் துப்புவது அல்லது குப்பைகளை கொட்டுவதை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், சுவா்களில் தெய்வ உருவங்கள் வைப்பதைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தீா்மானித்த போது நீதிமன்றம் இத்தீா்ப்பை அளித்தது. இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்- வழக்குரைஞா் கோரங் குப்தா தாக்கல் செய்த தனது மனுவில், ‘பொது இடங்களில் சிறுநீா் கழிப்பதைத் தடுக்க சுவா்களில் தெய்வங்களின் உருவங்களை வைப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் குப்பைகளை வீசுவது போன்ற செயல்கள் சமூகத்தில் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. ஏனெனில், இந்த உருவப் படங்கள் இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, மக்கள் பொது இடங்களில் சிறுநீா்க் கழிக்கிறாா்கள் அல்லது ‘புனித உருவங்கள்’ மீது உமிழ்கிறாா்கள்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.