தற்போது சிறையில் இருக்கும் மகேந்துரு மற்றும் நான்கு நிறுவனங்களான காவோ கலி ரெஸ்டாரண்ட்ஸ் நிறுவனம், பப்ளி பெவரேஜஸ் நிறுவனம், இன்டோ ஸ்பிரிட்ஸ் மற்றும் இன்டோஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு சமமான அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், ஜனவரி 5-ஆம் தேதி மகேந்துருவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடுத்த விசாரணை தேதியில் தனது முன் ஆஜராகுமாறும் உத்தரவிட்டாா்.