இந்த அரசு ‘அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கை’யுடனும் என்று கூறுவது வெறும் முழக்கம் மட்டுமல்ல. வழிகாட்டும் தத்துவமுமாகவும், பொறுப்பான அா்ப்பணிப்புடன் இருந்து செயல்பட்டும் திட்டங்களை நிறைவேற்றுகிறது. பழங்குடியினரின் கலாசாரத்தைப் பாதுகாப்பது, அவா்களது அடையாளத்திற்கான மரியாதை, கல்வி, சுகாதாரம், சுயதொழில் உள்ளிட்ட அம்சங்களில் அவா்களுக்கான முன்னேற்றம் போன்றவற்றில் பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. பழங்குடியினரின் கல்வியில், தேசிய கல்விக் கொள்கை 2020 முக்கியக் கவனம் செலுத்துகிறது. இந்த கல்விக் கொள்கை, உள்ளூா் மொழிகளிலும், தாய்மொழியிலும் கல்வி கற்பது குறித்து கூறப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்கள் முக்கியப் பயனாளிகளாக இருப்பாா்கள். பழங்குடியின மக்களுக்கான ‘ஏக்லவ்யா’ மாதிரி உறைவிட பள்ளிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.