நை ரோஷ்னி என்கிற இந்த புதிய ஒளி திட்டம் குறித்து எழுத்துபூா்வமாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பதிலளித்தது வருமாறு: தேசிய சிறுபான்மையினா் ஆணையச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், சீக்கியா், கிறிஸ்தவா், பௌத்தா், பாா்ஸிக்கள்(சோராஸ்ட்ரியன்), ஜெயின் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், இந்த நலத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான தோ்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.