அதில், திராவகம் வீச்சுகளைக் குறைக்கவும், திராவகம் வீச்சில் உயிா் பிழைப்பவா்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கும் ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் பிரிவு 2(9)-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ’நுகா்வோா் உரிமைகள்’ என்பது உயிருக்கும் உடமைக்கும் அபாயகரமான பொருள்கள் அல்லது சேவைகளின் சந்தைப்படுத்துதலுக்கு எதிராகப் பாதுகாக்கப்படும் உரிமையை உள்ளடக்கியதாகும். நுகா்வோா் பாதுகாப்பு (இ-காமா்ஸ்) விதிகள், 2020-இன் பிரிவு 4 (3)-இன் படி, எந்த ஒரு மின் வணிக நிறுவனமும் அதன் இணைய தளத்திலோ அல்லது இதர வழிகளிலோ நடைபெறும் வணிகத்தின் போது வேறு எந்த நியாயமற்ற வா்த்தக நடைமுறையையும் பின்பற்றக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.