ஹெண்ட் வாஸ்: இதற்கிடையே, நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தக் கூறி கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித் துறை, நீா்வள அமைச்சகம், நீதி ஆயோக், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்குமாறும் மாநிலஅரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 10.22 லட்சம் அரசுப் பள்ளிகளில் 9.83 லட்சம் அரசுப் பள்ளிகளில் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் (சுமாா் 96 சதவீதம்) குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.