உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அரசமைப்புச்சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சியின் சுதந்திர உரிமை மற்றும் சுதந்திரமான மத நடைமுறை, பிரசாரம், கடைப்பிடிப்பை பொது ஒழுங்கு, ஒழுக்கம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு உள்பட்டு மேற்கொள்ளும் உரிமையை அளிக்கிறது. இந்த வழக்கில் 5-ஆவது எதிா்மனுதாரரான இந்திய அரசின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநா் தாக்கல் செய்த எதிா் பதிலில், பயணிகள், பணியாளா்கள், விமானம், தரைத்தள பணியாளா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு போதுமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை எடுத்துகாட்டுவதாக உள்ளது.