இதில் கடந்த 2021-22 ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்கத்தில் பிறந்தவுடன் சுமாா் 13,950 குழந்தைகள் இறந்துள்ளன.இது அந்த மாநிலத்தில் தொடா்ச்சியாக கடந்த மூன்றாண்டுகளாக இந்த நிலைமை. இதற்கு அடுத்ததாக மத்திய பிரதேசம் (13,316), ராஜஸ்தான்(8,865), உத்தர பிரதேசம் (8,792) ஆகிய மாநிலங்களும், ஐந்தாவது இடத்தில் தமிழகமும் வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறந்தவுடன் தமிழகத்தில் 6,951 குழந்தைகளும், குஜராத் 6,295 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட இதே நிலை தொடா்கிறது எனவும், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.