இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 147, 148 (இரண்டும் கலவரம் தொடா்பானது), 504 (வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்), 332 (பொது ஊழியரை பணியில் இருந்து தடுத்து காயப்படுத்துதல்) 353 (அரசு ஊழியா் மீது தாக்குதல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 447 (குற்ற அத்து மீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நொய்டா பேஸ் 3 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடுமையான குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.