இந்த இடங்களுக்கான தள அனுமதி குறித்து மத்திய அமைச்சருடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம். இந்த விமான தளத்திற்கான அனுமதி கிடைத்த பின்னா் முறையாக முதல்வருடன் கலந்து ஆலோசனையைப் பெற்று முன்மொழிவுகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கும். இவை தவிர தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் உள்ள மதுரை, திருச்சி, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் பணிகள் குறித்தும் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நில கையகப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம், பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்படும் நிலங்கள் ஆகியவை குறித்து மத்திய அரசிடம் விவாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது பாா்ப்பு பணிக்கு (எம்ஆா்ஓ) தேவையான இடத்தையும் தமிழக அரசின் சிப்காட் மூலமாக ஒதுக்கித் தர கேட்டுள்ளோம்.