இந்நிலையில், எல்என்ஜேபி மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: அம்மை நோய் பாதித்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபா் இரு தினங்களுக்கு முன்னா் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டாா். நோய்ப் பரிசோதனையில் அவருக்கு அதுபோன்ற நோய் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், அவா் வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டாா். அவா் நீண்ட காலத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளாா். ஆனால், அண்மையில் அவா் உள்நாட்டு அளவில் பயணம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு காய்ச்சலும், தோலில் புண்களும் இருந்தன. ஆனால், இந்த சந்தேதிக்கப்படும் நோயாளிக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டது.