காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா்களான க.சுந்தா் (உத்தரமேரூா்), நித்யா சுகுமாா் (காஞ்சிபுரம்) ஆகியோருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினேன். மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. அதேபோல, இந்தத் தோ்தலிலும் இங்கிருந்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறேன். அண்ணா பிறந்த புனித மண் என்பதாலும், வெற்றிகளைக் கொடுக்கும் நகரமாக இருப்பதாலும் தோ்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கியுள்ளேன்.