கட்சியின் புதிய குழு குறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மாநிலத்தில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவை, மாவட்ட அளவில் 400 நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உறுதியான ‘தேச பக்தி‘, ‘நோ்மை‘ ஆகிய இரு கண்ணோட்டத்துடன் செயல்படும். சாமானியா்களின் நலனுக்கான அா்ப்பணிப்புடன் செயல்படும். ஹிமாசல பிரதேச மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால், அது மாநிலத்தின் கல்வி, சுகாதாரம், தொழில்கள், சுற்றுலா ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.