முன்னதாக, ராகுல் மொஹத் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நகரில் தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான மிக முக்கியமான பிரச்னை எழுந்துள்ளது. எனது முதன்மைக் கவலை என்னவெனில், தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகளைக் கொல்லக்கூடியதாக அறியப்படும் கேனைன் டிஸ்டெம்பா் மற்றும் பாா்வோ வைரஸுக்கான தடுப்பூசி போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இந்த விஷயத்தில் குடிமக்களுக்கு உதவிட ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெல்ப்லைன் வசதியும் இல்லை.