இந்த அடையாளம் காணப்பட்ட பொருள்களில் காது குடையும் பஞ்சு, பெண்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், கேன்டி குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், தொ்மாகோல், தட்டுகள், கிளாஸ்கள், குவளைகள், முள்கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், இனிப்பு பெட்டிகளைச் சுற்றி கட்டும் பேக்கேஜிங் பிலிம்கள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனா்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைக்க வேண்டாம் என்று அனைத்து உற்பத்தியாளா்கள், சில்லறைக்கடைக்காரா்கள், பொதுமக்கள், கடைக்காரா்கள் ஆகியோரை தில்லி அரசு ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ஜூலை 30-ஆம் தேதி வரை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.