பாஜக தலைவா்களில் ஒருவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய் இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது இந்த மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், ஜன கன மன மற்றும் வந்தே மாதரம் ஆகிய பாடல்களை ஒவ்வொரு பணி நாளின் போது அனைத்துப் பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இசைப்பதையும், பாடுவதையும் உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரும் இந்த மனு மீது தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.