இதற்கிடையே, தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் விவாதத்தில் தில்லி சட்டப்பேரவையில் பங்கேற்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசினாா். அவா் பேசுகையில், குஜராத்தில் தனது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 4 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டாா். அவா் மேலும் பேசுகையில், ‘துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ சோதனை நடத்தப்பட்ட பின்னா், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு விகிதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அவா் கைது செய்யப்பட்டால் இந்த வாக்கு விகிதம் மேலும் 6 சதவீதம் அதிகரிக்கும்’ என்றாா்.