முன்னா், அரசுகள் பள்ளிகளை நடத்த முடியாது என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது சிஎஸ்ஆா் முயற்சிகள் மூலம் கையாள வேண்டும் என்றும் கூறப்பட்டது. கல்வி என்பது தா்மம் அல்ல. அது உரிமை விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வியை வழங்கினால் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும் என்றாா் அவா். ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் முதல் 1,000-இல் ரேங்க் பெற்ற 28 மாணவா்களை முதல்வா் கேஜரிவால் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.