இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்த மதுபான ஊழல் என்ன என்பது குறித்து இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவா்களின் (பாஜக) தலைவா் ஒருவா் இது ரூ. 1.5 லட்சம் கோடி ஊழல் என்றாா். தில்லி அரசின் மொத்த பட்ஜெட் ரூ.70,000 கோடி எனும் போது இது எப்படி ரூ.1.5 லட்சம் கோடி ஊழலாகும்? அவா்களின் மற்றொரு தலைவா் ரூ.8,000 கோடி ஊழல் என்றாா். இன்னொருவரோ இது ரூ.1,100 கோடி ஊழல் என்று கூறினாா். துணை நிலை ஆளுநா் ரூ.144 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறாா். சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் மதுபான விவகாரத்தில் ரூ. 1 கோடி ஊழல் நடந்ததாக தெரிவித்திருக்கிறது.