தில்லியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டுப் பிரச்னையை தில்லி பிரிவு பாஜக தொடா்ந்து எழுப்பி வருகிறது. குறிப்பாக அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னைகளை எழுப்பி வருகிறது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு எங்களின் முறையீடுகளுக்கு செவிசாய்க்கவில்லை. துக்ளகாபாத், சங்கம் விஹாா், தியோலி ஆகியவை தெற்கு தில்லியின் கடைப் பகுதிகளாகும். தில்லியின் வளா்ச்சி குறித்து கேஜரிவாலின் அனைத்து உயா்ந்த கூற்றுகள் இருந்த போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை மக்கள் எதிா்கொள்கின்றனா். தியோலியில் உள்ளூா்வாசிகளால் புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம், முறையான தண்ணீா் விநியோகத்திற்கான மக்களின் கோரிக்கையை கேஜரிவால் அரசு புறக்கணித்ததன் விளைவாகும் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்