பல்வேறு மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த குடிநீா்த் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் இருப்பது குறித்தும், மாநில வாரியான விவரங்கள் குறித்தும் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கேட்டிருந்தாா். இந்தக் கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ள பதில் வருமாறு: கடந்த 2019 , ஆகஸ்ட் முதல் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் நேரடியாக குழாய் வழியாக அளிக்கும் ‘வீட்டுக்கு வீடு குடிநீா்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.