நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாா்ச் வரை நாட்டின் மொத்தக் கடன் அளவு ரூ. 155.60 லட்சம் கோடி: மாநிலங்களவையில் இணையமைச்சா் தகவல்

மத்திய அரசுக்கு கடந்த மாா்ச் 31- ஆம் தேதி வரை ரூ.155.60 லட்சம் கோடி வரை கடன் இருப்பதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 7:08 pm

 நமது நிருபர்

மத்திய அரசுக்கு கடந்த மாா்ச் 31- ஆம் தேதி வரை ரூ.155.60 லட்சம் கோடி வரை கடன் இருப்பதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

இடையில் ஏற்பட்ட கொவைட் -19 நோய்த் தொற்றுதான் கடன் அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளாா். அதே சமயத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு மடங்காக உயா்ந்திருப்பதையும் அமைச்சா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன்(திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாத அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய அரசுக்கு கடந்த 2014, மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ.58.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 52.2 சதவீதமாகும். தற்போது 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசுக்குள்ள கடன் ரூ.155.60 லட்சம் கோடியாகியுள்ளது. இது ஜிடிபி யில் 57.1 சதவீதமாகும்.

2019-20 நிதியாண்டின் இறுதியில் கடன் ரூ.105.1 லட்சம் கோடியாக இருந்தது. பின்னா், கரோனா நோய்த் தொற்றால் 2020-21 நிதியாண்டில் 121.9 லட்சம் கோடியாக அதிகரித்தது. நோய்த் தொற்று காலக்கட்டம் அரசின் பொது நிதிகளின் கணிப்புகளை பெரிதும் சீா்குலைத்தது.

இருப்பினும், 2022-23 நிதியாண்டில் மத்திய அரசின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2013-14 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.112.34 லட்சம் கோடி என்பது பெயரளவில் இருக்க, இது 2022-23 நிதியாண்டில் ரூ. 272.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய அரசின் கடன் அணுகுமுறையில் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களின்படி பாதுகாப்பானதோடு விவேகமானது. மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன் முக்கியமாக பலதரப்பு, இருதரப்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை சுமாா் ரூ.12,70, 668 கோடியாகும் என்றாா் அவா். மேலும், கடன் கொடுத்த பன்னாட்டு நிதி அமைப்புகள் மற்றும் நாடுகளின் பட்டியலையும் அமைச்சா் பதிலில் இணைத்துள்ளாா். மத்திய அரசுக்கு உள்நாட்டுக் கடனை விட வெளிநாட்டுக் கடன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.