நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தலைநகரில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள்: மாநிலங்களவையில் தகவல்

தில்லியில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள் வசித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2023, 9:02 pm

 நமது நிருபர்

தில்லியில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள் வசித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த 5 வருடங்களாக உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் அதில் வசிக்கும் மக்களுக்கான வசதிகள், அவா்களுக்கு அளிக்கப்படும் புனா்வாழ்வு குறித்து மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் டாக்டா் வி.சிவதாஸன் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் எழுத்துபூா்வமாக பதிலளித்து கூறியதுவருமாறு: தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசின் கீழ் உள்ள தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) தில்லியுள்ள 675 குடிசைப் பகுதிகளை கணக்கிட்டுள்ளது. இங்குள்ள 3,06,521 குடிசைகளில் 15.5 லட்சம் மக்கள் வசிப்பபதாக கணக்கிட்டுள்ளது. இா்களுக்கு தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியமும், தில்லி வளா்ச்சி ஆணையமும் புனா்வாழ்வு அளித்து வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் 1,297 குடிசைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டி கொடுத்தோ அல்லது மாற்று இடங்களிலோ புனா்வாழ்வு அளித்துள்ளது. இதே போன்று 2022-23-ஆம் ஆண்டில் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) ரூ.212.73 கோடி செலவில் பூமிகன் கேம்ப், கோவிந்த்புரி, கால்காஜி போன்ற இடங்களில் உள்ள குடிசைகளுக்கு மாற்றாக 8,379 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டம் ‘அம்ருத்’ என்கிற புத்துணா்ச்சிக்கான அடல் மிஷன் மற்றும் நகா்ப்புற மாற்ற திட்டம், தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் குடிசைவாசிகள் நகா்ப்புற மக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை சேவைகளை வழங்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை புரிகிறது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.